
உள்ளூர் கலைஞர் கவிமாறன் தலைமையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி லெபோ அம்பாஙில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் தன் வசீகரமான குரலால் பரவலாக பிரபலமான கவிமாறன், இந்த நிகழ்ச்சியில் பல பிரபல மலேசிய கலைஞர்களுடன் இணைந்து சிறப்பான பாடல்களைப் பாடினார்.

நிகழ்ச்சி முழுவதும் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பலரும் மேடைக்குக் கீழே இருந்து பாடல்களுடன் சேர்ந்து பாடி உற்சாகம் காட்டினர்.
உள்ளூர் கலைஞர்களின் சிறப்பான பாடல்களும், கவிமாறனின் உணர்ச்சி மிக்க குரலும் நிகழ்ச்சியை கலைக்கட்ட வைத்தன.



