
அமைச்சரவை மாற்றத்தின் பொழுது கெஅடிலானை நேர்ந்த இந்தியர் ஒருவருக்கு அமைச்சர் பதவியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் வழங்க வேண்டும் என்று மக்கள் பொது நல செயல்கட்சியின் தேசியத் தலைவர் வி.எம்.கோபி அன்பு வேண்டுகோள் விடுத்தார். இது சம்மந்தமாக பிரதமருக்கு உடனடி அவசர கடிதத்தை அனுப்பவிருப்பதாக தெரிவித்தார். இதன் வழி கெஅடிலான் இந்திய உறுப்பினர்களுக்கு புதிய நம்பிக்கையையும் எழுச்சியையும் ஏற்படுத்தும் என்றும் முன்னாள் விலாய மாநில கெஅடிலான் துணைத்தலைவருமான வி.எம்.கோபி தெரிவித்தார்.
