
இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டையில் அமைந்திருக்கும் சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் 25வது ஆண்டு வெள்ளிவிழாவும் , பட்ட மளிப்பு விழாவும் மிகச் சிறப்பாக நடந்தேரியது . தமிழக முக்கிய தலைவர்களும், லால்பேட்டை ஷேய்க் அல்லாமா நூருல் அமீன் ஹஜ்ரத் கிப்லா அவர்களும் ,மன்பஈ பேரவையின் தலைவர் முதுகளுத்தூர் சேய்க் பஷீர் ஷேட் ஆலிம் மற்றும் தமிழகத்தின் தலைச்சிறந்த உலமாக்கலும் , ஜமாத்தார்களும் ,ஊர் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர் .
விழாவின் நினைவு பரிசாக மலேசிய தொழிலதிபர் அலி மாஜூ குரூப் நிருவனரும், கோலாலம்பூர் பரீதிய்யா தஹ்பீஜ் மதரசாவின் ஸ்தாபகருமாண மரியாதைக்கும் மேன்மைக்குறிய டத்தோ ஹாஜி ஜவ்ஹர் அலி தய்யூப்கான் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்ட தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இறுதியில் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் 25-ம் வெள்ளி விழா ஆண்டு் நிறைவடைந்தது.
