
மே மாதம் 24ஆம் தேதி இரண்டு எம்ஆர்டி ரயில்கள் மோதிக்கொண்ட சம்பவம் நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் பலர் காயமுற்றனர்.
இந்த இரு ரயில்கள் விபத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மூடிமறைக்கப்படாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு அறைக்கும் ரயில் ஓட்டுனருக்கு இடையிலான தொடர்பு முறையில் ஏற்பட்ட கோளாறுகளினால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
