
செய்தி / படங்கள் : எம்.முருகன்
திருச்சியில் அமைந்துள்ள எல்லை காளியம்மன் மற்றும் காளியம்மன் நான்கு கோவில்களில் நடைபெற்ற திருவிழா, பக்தி எழுச்சியுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில் அரசியல் பிரமுகர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

திருவிழாவை முன்னிட்டு, ஏற்பாட்டாளர் பாக்கியராஜ் அவர்களின் ஏற்பாட்டில் 500 பேருக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதியாக பங்கேற்க சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெய்வ அருளைப் பெற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஏற்பாட்டாளர் பாக்கியராஜ் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
மேலும், இந்நிகழ்வில் மலேசிய தமிழ் லென்ஸ் ஊடகத்தைச் சேர்ந்த காளி தீபன் மற்றும் தமிழக மகேஷ் சுற்றுலா நிறுவனத்தின் இயக்குனர் குபேரன் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.

இந்த திருவிழா, பக்தி உணர்வுடனும் சமூக ஒற்றுமையுடனும் சிறப்பாக நடைபெற்றது.
