26.4 C
Kuala Lumpur
Thursday, April 16, 2026

Vetri

பரம்பரை மாமலை நாத ஈஸ்வரர் சுவாமிக்கு டத்தோஸ்ரீ ராஜேந்திரன் – டத்தின் ஸ்ரீ அமுதா தலைமையில் கும்பாபிஷேக விழா!

செய்தி / படங்கள் : கோபி

தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிங்கபுரம் பட்ட சுப்பிரமணியசாமி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் மாமலை ஸ்ரீ மண்டாடி தேவர் ஆதீ சொக்கநாதர் திருக்கோவிலில், பரம்பரை மாமலை நாத ஈஸ்வரர் சுவாமிக்கு நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வு பக்தி பரவசத்துடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த புனித நிகழ்வு 02–03–2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.20 மணி முதல் 10.20 மணி வரை வேத மந்திரங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது. ஆலய பாரம்பரிய முறைகளின்படி யாக பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழா டத்தோஸ்ரீ ராஜேந்திரன் – டத்தின் ஸ்ரீ அமுதா தலைமையில் நடைபெற்றது. இவர்களது சொந்த செலவில் இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மலேசியாவில் 10க்கும் மேற்பட்ட கோவில்களை கட்டியுள்ளதன் மூலம் அவர்கள் பல ஆன்மீக மற்றும் சமூக பணிகளை செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்த புனித நிகழ்வில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் அருளைப் பெற்றனர். விழாவை முன்னிட்டு 5,000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தை டத்தோஸ்ரீ ராஜேந்திரன் வழங்கி பக்தர்களின் பாராட்டைப் பெற்றார்.

இந்த கும்பாபிஷேக நிகழ்வு, ஆலயத்தின் ஆன்மீக பாரம்பரியத்தையும் பக்தர்களின் பக்தி உணர்வையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles