34 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

மகாதீர் அதிர்ச்சி ஒப்புதல்: “மலேசியர்களை ஒன்றிணைக்க முடியவில்லை”… பின்னணி என்ன?

🔥 Views : 5,023
👁 Reading Now : 38

கடந்த இரண்டு ஆண்டுகளாக மலேசியர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டபோதும், அதில் தாம் தோல்வியடைந்துவிட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒப்புக்கொண்டுள்ளார்.

தனது சமூக ஊடகத்தில் “தோல்வி” என்ற தலைப்பில் வெளியிட்ட சுருக்கமான பதிவில், இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

“நான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியர்களை ஒன்றிணைக்க முயற்சித்தேன். ஆனால் நான் தோல்வியடைந்துவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும்,
👉 இந்த நாடு மலேசியர்களின் கைகளிலிருந்து நழுவிவிடும்
👉 இனம், நாடு, மதத்தை விட மக்களின் எதிர்காலமே முக்கியம்

என்றும் அவர் தெரிவித்தார்.

“மலேசியர்களின் வரலாறு முடிவுக்கு வரும் நிலை உருவாகக்கூடும்,” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மலாய்க்காரர்களை ஒன்றிணைப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அவர் விரிவாக விளக்கவில்லை.

கடந்த ஆண்டு ஜூன் 4ஆம் தேதி, மலாய்க்காரர்களின் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் மலாய் செயலகம் என்ற அமைப்பை மகாதீர் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles