27.8 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

🌏 “உலகம் கவனிக்கும் சந்திப்பு!” – பெய்ஜிங்கில் டிரம்ப் – ஜி ஜின்பிங் நேருக்கு நேர்

🔥 Views : 2,644
👁 Reading Now : 63

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன தலைவர் ஷி ஜின்பிங் ஆகியோர், உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார வல்லரசுகளுக்கிடையே நீடித்து வரும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இன்று பெய்ஜிங்கில் முக்கிய சந்திப்பில் ஈடுபடுகின்றனர்.

ஈரான், வர்த்தக போர், தைவான் உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய விடயங்கள் இந்த உச்சி மாநாட்டில் பேசப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெய்ஜிங்கில் உள்ள பிரமாண்டமான “Great Hall of the People” மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த சந்திப்பில், சீன தலைவர் ஷி ஜின்பிங், டிரம்புக்கு முழுமையான அரசு மரியாதையுடன் வரவேற்பளிக்கவுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இருக்கும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையே கடுமையான பதற்ற நிலை நீடித்தாலும், டிரம்புக்கு வழங்கப்படும் பிரம்மாண்ட வரவேற்பு உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

இரு தலைவர்களும் மாலை நேரத்தில் அரச விருந்திலும் கலந்துகொள்ளவுள்ளதுடன், டிரம்ப் சீனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க “Temple of Heaven” நினைவிடத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்காக நேற்று இரவு Air Force One விமானம் மூலம் பெய்ஜிங்கை வந்தடைந்தார்.

அவருடன் Nvidia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் மற்றும் Tesla நிறுவனத்தின் இலான் மஸ்க் உள்ளிட்ட முக்கிய அமெரிக்க தொழிலதிபர்களும் பயணம் செய்துள்ளனர். இது, சீனாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்த டிரம்ப் எதிர்பார்க்கும் முயற்சியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

டிரம்பை வரவேற்க சீன இளைஞர்கள் 300 பேர் வெள்ளை உடையில் “Welcome” என முழக்கமிட்டு, அமெரிக்க மற்றும் சீன தேசியக் கொடிகளை அசைத்தபடி சிவப்பு கம்பள வரவேற்பளித்தனர்.

வெள்ளிக்கிழமை, டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் தேநீர் சந்திப்பு மற்றும் வேலைநிறைவு மதிய உணவில் கலந்துகொண்ட பின்னர், டிரம்ப் வாஷிங்டனுக்கு புறப்படவுள்ளார்.

2017ஆம் ஆண்டு தனது முதல் சீனா பயணத்திற்குப் பின்னர், சீனப் பொருட்களுக்கு எதிராக டிரம்ப் கடுமையான வரி மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். கடந்த ஆண்டு மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்பிய பின்னரும் அதே நடவடிக்கைகளை மேற்கொண்டதால், இரு நாடுகளுக்குமிடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்தது.

பின்னர், கடந்த அக்டோபரில் டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின் மூலம் தற்காலிக சமாதானம் எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles