28.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

ஜொகூர் மக்களின் நம்பிக்கையைப் பெற விரும்புகிறோம்; அந்த நம்பிக்கையை ஒருபோதும் வீணடிக்க மாட்டோம் – பிரதமர் அன்வார்!

🔥 Views : 3,426
👁 Reading Now : 68

வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் மாநில நிர்வாகத்தை வழிநடத்தும் பொறுப்பை நம்பிக்கை கூட்டணி (PH) வேட்பாளர்களிடம் ஒப்படைக்குமாறு ஜொகூர் மக்களிடம் பிரதமரும் நம்பிக்கை கூட்டணித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜொகூர் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதும், அந்த நம்பிக்கையை முழுப் பொறுப்புடனும் காக்குவதும் நம்பிக்கை கூட்டணியின் உறுதியான நோக்கம் என அவர் தெரிவித்தார். மக்களால் வழங்கப்படும் நம்பிக்கை ஒருபோதும் வீணடிக்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

“அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜொகூரை வழிநடத்தும் பொறுப்பை நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களுக்கு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மக்களின் நலனுக்காக உழைக்கும் திறனும் அர்ப்பணிப்பும் கொண்டவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மேலும், தகுதியானவர்களிடம் நம்பிக்கை வைப்பதன் அவசியத்தையும், சமூகத்தில் நீதி மற்றும் பொறுப்புணர்வை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மக்கள் நலனை மையமாகக் கொண்டு செயல்படும் ஆட்சியை உருவாக்குவதே நம்பிக்கை கூட்டணியின் இலக்காகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles