26.4 C
Kuala Lumpur
Wednesday, September 16, 2026

Vetri

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு கௌரவம்

🔥 Views : 2,003
👁 Reading Now : 44

காரைக்குடி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரியில் ஆசிரியர்களை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, அவர்களின் கல்விப் பணிகளுக்கும் வழிகாட்டுதல்களுக்கும் நன்றியையும் மரியாதையையும் வெளிப்படுத்தினர்.

கல்லூரியின் தலைமை இயக்குநர் சேது பாஸ்கரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆசிரியர்களை சிறப்பித்து, அனைவருக்கும் தனது மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பதை எடுத்துரைத்த அவர், ஆசிரியர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் தங்களது கல்விப் பணியைத் தொடர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான அன்பு, மரியாதை மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த ஆசிரியர் தின நிகழ்ச்சி, மகிழ்ச்சியான சூழலில் சிறப்பாக நிறைவடைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles