
மக்கள் நடமாட்ட உத்தரவு காலத்தில் ஷா ஆலம் செக்சன் 15, மதுபான தொழிற்சாலை ஜூன் முதல் தேதி முதல் எந்த உற்பத்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த மதுபான தொழிற்சாலை செயல்படுகிறது என்று கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை என்று ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் பகாருடின் மாடங தாயிப் தெரிவித்தார்.
தமது தலைமையில் போலீசார் அந்த ஆலையில் மேற்கொண்ட சோதனையில் அங்கு மதுபானங்கள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்
