
மாட்சிமை தங்கிய மாமன்னர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு அரசாங்கம் மறுத்தால் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவது தொடர்பில் அம்னோ தனது உச்சமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் அஸ்ராப் வாஜிடி டுசுக்கி கேட்டுக் கொண்டார்.
ஆட்சியாளர்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குள் அவசர கால பிரகடனம் முடிவடைவதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தை சங்கம் கூட்ட வேண்டும்.
அப்படி தவறினால் அடுத்தகட்ட கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து அம்னோ தனது உச்சமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
