
ஜோர்ஜ்டவுன் பத்து உபான் சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் பி-40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பினாங்கு மாநிலத்தின் மின் கற்றல் கணினி திட்டத்தின் கீழ் 11 பள்ளிகளை சேர்ந்த 85 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.
தனியார் நிறுவனம் ஒன்றின் ஆதரவில் வழங்கப்பட்ட இந்த கணினிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம்,அந்தந்த பள்ளிகளின் பெற்றோர் ஆசியர் சங்கம் அல்லது பிரதிநிதிகளிடம் அவற்றை ஒப்படைத்தார்
.வசதிக் குறைத்த மாணவர்கள் இணையம் வழி பிடிபிஆர் திட்டை மேற்கொள்ள உதவிகள் வழங்கும் மாநில அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அவர் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
