
மலேசியாவின் இதயம் என்று வர்ணிக்கப்படும் கோலாலம்பூரில் கோத்தாராயா மற்றும் புடுராயுவில் வீதியோரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் இன்னமும் வாழ்ந்து வருகிறார்கள்.
வீடாற்றோர் என்று வர்ணிக்கப்படும் இவர்கள் பல்வேறு பிரச்சினைகளினால் சொந்த குடும்பத்தில் இருந்து வெளியேறி தற்போது வீதியோரங்களில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் பசியைப் போக்க பல நல்ல உள்ளங்கள் உணவுகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன..
அந்த வகையில் காஜாங் வடாடாரத்தைச் சேர்ந்த இளைஞர் திவாகர் குருநாதன் தினமும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு சுவையான உணவை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
மகா தேஜோ மண்டலம் அமைப்பின் மூலம் இவர் தனது நண்பர்களுடன் இணைந்து இந்த உதவியை பல ஆண்டுகளாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
