
பல்வேறு தூய்மை கேட்டினால் அவதியுறும் செராஸ் பூலாவ் பினாங்கு குடியிருப்பாளர்கள்
செராஸ் ஈக்கான் மாஸ் பூலாவ் பினாங்கு குடியிருப்பாளர்கள் பல்வேறு தூய்மை கேட்டினால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இங்கு நான்கு மாடி குடியிருப்புகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இங்கு அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை என்று குடியிருப்பாளர் அலெக்ஸ் தெரிவித்தார்.
கோலாலம்பூர் மாநகர் மன்றம் இந்த குடியிருப்பு முழுவதும் அதிகளவில் சுத்தப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மாதத்துக்கு இரண்டு முறை இந்த குடியிருப்பை நீரூற்றி சுத்தப்படுத்த வேண்டும். மேலும் குழாய்களும் பழுது பார்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்
