

பேரா மாநிலத்தில் இன்னமும் ஒரு தலைசிறந்த கிளப்பாக சுங்கை சிப்புட் சுசித்தா கிளப் விளங்கிக் கொண்டிருக்கிறது.
கோலகங்சார மற்றும் சுங்கை சிப்புட் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்று வரும் வேளையில் தற்போது 12 முதல் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட இளைஞர்களுக்கு கால்பந்து பயிற்சி அகாடமியும் நடத்தி வருகிறது.
நிர்வாகி தாமோதரன்
மற்றும் ஜெகநாதன் தலைமையில் பயிற்றுநர் கோவிந்தராஜ், கேப்டன் குணசேகர் ஆகியோர் இந்த கிளப்பை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இனிவரும் காலங்களில் கோலாகங்சார், சுங்கை சிப்புட் வட்டாரத்தில் நடைபெறும் இளையோர் கால்பந்து போட்டிகளிலும் களமிறங்க சுசித்தா கிளப் திட்டமிட்டுள்ளது.
