
கடுமையான மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு அமலில் இருக்கும் காரணத்தால் வேலையிழந்த ஆடவர் ஒருவர் மன உளைச்சலில் மனைவி மற்றும் பிள்ளைகளை வீட்டில் அடைத்து வைத்தார்.
இச்சம்பவம் தொடர்பில் புகார் பெற்ற போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடும்ப மாதுவையும் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றினர்.
நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு காரணத்தால் வேலையில் இழந்த அவர் வருமானம் இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் தம்முடைய இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியை வீட்டை விட்டு வெளியேற விடாமல் வீட்டிலேயே இருக்குமாறு முன்புறம் மற்றும் பின்புற கதவை பூட்டியுள்ளார்.
சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்து போலீசார் மங தீயணைப்பு படை வீரர்கள் அவர்களைக் காப்பாற்றினார்
. காலையிலிருந்து இவர்கங யாரும் சாப்பிடாமல் இருந்தது தெரியவந்துள்ளது.
