
அம்னோ தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி 25 எம்பிக்கள் ஆதரவை இழந்து விட்டார் என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நஸ்ரி தெரிவித்தார்
தேசிய முன்னணியின் (42 எம்.பி.க்களில், பெரும்பான்மையினர் அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் முன்னிலையில் ஆஜராக, செம்புரோங் எம்.பி.யும் வெளியுறவு அமைச்சருமான டத்தோஸ்ரீ இஷாமுடின் அழைக்கப்பட்டால் அவருக்கு ஆதரவாக ’25 பி.என். எம்.பி.க்கள் பிரமாணப் பத்திரம் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மாமன்னர் கட்சித் தலைவர்களைச் சந்திக்க விரும்புவதை அறிந்தபோது, நான் இனி அம்னோ தலைவரை நம்புவதாக இல்லை.
அக்டோபரில் பி.என். நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை ஆதரிப்பதாகத் தவறான தகவல்களை ஜாஹிட் மாமன்னருக்கு அளித்தார்.
நாங்கள் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அல்லது டிஏபியை ஆதரிக்கவில்லை என்ற உண்மையை டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் சொல்வார் என்று நான் நம்புகிறேன் என்று டத்தோஸ்ரீ நஸ்ரி தெரிவித்தார்
