
மக்கள் நடமாட்டம் உத்தரவு காலத்தில் பினாங்கு புக்கிட் மெர்தாஜமில் உள்ள தங்கும் விடுதியில் கூத்து கும்மாளம் அடித்த ஐந்து பெண்கள் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்திருப்பதாக செபெராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் ஷாஃபி அப்துல் சமாட் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 18 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆடவர்கள் அனைவரும் போதைப்பொருள் உட் கொண்டுள்ளனர். அதேசமயம் பெண்கள் யாரும் போதைப்பொருளை உட்கொள்ளவில்லை. இந்த தங்கு விடுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
