
போலீஸ் தடுப்புக்காவலில் மரணமடைந்த கணபதிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று கெஅடிலான் என்று இளைஞர் பிரிவு அறிவித்துள்ளது. எந்த ஒரு குற்றமும் செய்யாத கணபதி தடுப்புக்காவலில் சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்ததாக அவரின் குடும்பத்தார் போலீஸ் புகார் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட கணபதி குடும்பத்திற்கு நீதி கிடைக்க நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் விலாய மாநில கெஅடிலனலான் இளைஞர் பிரிவு தலைவருமான பிரபாகரன் தெரிவித்தார்.

இரு தினங்களுக்கு முன்னர் கணபதி இல்லத்துக்குச் சென்றார் பிரபாகரன்’,ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா, செலாயாங் கெஅடிலான் இளைஞர் பிரிவு தகவல் தலைவர் தினேஷ், ரவாங் கிராமத் தலைவர் தேவா ஆகியோர் ஆறுதல் கூறினர். கணபதி தாயாரை சந்தித்து ஆறுதல் கூறிய இவர்கள் உயிரிழந்த தங்கள் மகன் கணபதிக்கு நீதி கிடைக்க இறுதிவரை போராடுவோம் என்று தெரிவித்தனர்.
