
Bantuan prihatin rakyat எனப்படும் உதவித்தொகை மே 7ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக மக்களுக்கு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ தொங்கு ஷப்ருல் தெரிவித்தார்.
இந்த இரண்டாம் கட்ட உதவித்தொகைக்காக அரசாங்கம் 275 கோடி வெள்ளியை ஒதுக்கி உள்ளது என்றார் அவர்.
36 லட்சம் குடும்பங்கள், 10 லட்சம் மூத்த குடிமக்கள் மற்றும் 38 லட்சம் திருமணம் ஆகாத மக்கள் இந்த உதவி தொகையை பெறுவார்கள் என்று அவர் சொன்னார்.
