
கெடா மாநிலத்தில் தங்கள் வீடுகளில் வெள்ளைக் கொடியை பறக்க விடுவோருக்கு உதவிகள் வழங்கப்படாது என்று மாநில மந்திரி புசார் முகமது சனுசி அறிவித்துள்ளார்.
வெள்ளைக் கொடியை பறக்க விடுவது அரசியல் பிரச்சாரம் நோக்கம் கொண்டது. மேலும் தங்களுக்கு அரசாங்கம் உதவி வழங்க தவறிவிட்டது என்ற தோற்றத்தை அது ஏற்படுத்துகிறது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆகவே வெள்ளைக் கொடியை பறக்க விடுவோருக்கு கெடா அரசாங்கம் எந்த ஒரு உதவியும் வழங்காது என அவர் அறிவித்துள்ளார்.
