
மாட்சிமை தங்கிய மாமன்னர் உத்தரவுக்கு ஏற்ப ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்னதாகவே நாடாளுமன்றத்தை விரைந்து கூட்டப்பட வேண்டும்.
ஆனால் நாடாளுமன்றம் கூடுவது தொடர்பில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இன்னமும் மௌனம் சாதிக்கிறார்..
நாடாளுமன்றம் கூட்டப்படுவது தொடர்பில் அவர் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் செய்யவில்லை.
ஆகவே அவர் தொடர்ந்து மெளனம் காத்தால் வரும் ஜூலை 19ம் தேதி நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஒன்று கூடுவார்கள் என்று பக்கத்தான் ஹரப்பானைச் சேர்ந்த கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் மற்றும் அமானா தலைவர் முகமட் சாபு தலைவர்கள் இன்று கூட்டாக அறிவித்துள்ளனர்.
