
கோவிட் நோய்த்தொற்றை விரைவில் கண்டறியும் ultrasound கையடக்க கரூவிகளை தற்போது மலேசிய மருத்துவமனைகள் பயன்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கையடக்க தொலைபேசி கருவியைப் போன்று ஆற்றலைக் கொண்ட அல்ட்ரா சவுண்ட் கருவிகள் தற்போது நோய்த்தொற்றை கண்டறியும் சோதனையில் பயன் படுத்தப்படுகிறது என்று tuaku fauziah மருத்துவமனையின் ஆலோசகர் டாக்டர் பாராஸ் டோஸி தெரிவித்தார்..
சிடி ஸ்கேன் போன்ற பெரிய கருவியைப் பயன்படுத்தி இருதயம், நுரையீரல்,சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளை பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
மாறாக இந்த கையடக்க கருவியை கொண்டு உடல் உறுப்புகளை பரிசோதிக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
