
வெள்ளைக் கொடியை வீட்டின் முன் ஏற்றிய ஐந்து குடும்பங்களுக்கு ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதி சார்பில் உதவி வழங்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று தாக்கத்தினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருந்த போது வெள்ளைக் கொடியை ஏற்றிய குடும்பங்களை சந்திக்க நேர்ந்ததாக ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் இயான் யோங் ஹியான் வா தெரிவித்தார்.
நாங்கள் சொந்தமாக அடையாளம் கண்டவர்கள் தவிர்த்து, வெள்ளைக் கொடி பறக்கும் வீடுகள் குறித்த தகவல்களை பொதுமக்களும் வழங்கி உதவினர். சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு உடனடியாக உணவுப் பொருள்களை வழங்கி உதவினோம் என்றார் அவர்
