
MCO எனப்படும் மக்கள் நடமாட்டம் உத்தரவு காலத்தில் டுரியான் சாப்பிடும் விருந்தில் பங்கேற்ற நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஷிட்டிடம் என்று போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
கடந்த வியாழக்கிழமை இவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர் என்று
பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் இஸ்மாயில் டோலா தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்து பஹாட்டில் நடைபெற்ற டுரியான் சாப்பிடும் விருந்தில் இவர் பங்கேற்று உள்ளார்.
மேலும் பலரும் இதில் காணப்படும் காணொளி வைரலானது.
ஆனால் இது கடந்த ஆண்டு நடைபெற்றது என்று நிகழ்வு என்று முதலில் கூறப்பட்டது ஆனால்.நெட்டிசன்கள் இது கடந்த வாரம் நடைபெற்றது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே துணை சபாநாயகர் உட்பட மொத்தம் 14 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
