
நாட்டில் உள்ள நகைக்கடைகள் மற்றும் ஜவுளிக்கடைகள் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என பினாங்கு வியாபாரிகள் சார்பாக டிகே. தேவகுமரன் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
பினாங்கில் குறிப்பாக லிட்டல் இந்தியாவில் தொற்று நோய் சம்பவம் பதிவு இல்லாத நிலையில் இஙகு எஸ்ஒபி கட்டுப்பாடுகளுடன் நகைக்கடைகள் மற்றும் ஜவுளிக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் மேலும், இந்தியாவிலிருந்து இந்நாட்டுக்கு வேலை செய்ய வரும் தொழிலாளர்கள் இரண்டு கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றிருந்தால் அவர்களை வேலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று தேவன் ஜூவர்லர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஓருவரான தேவகுமரன் இன்று AST செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
