
அம்னோ பொதுப் பேரவையின் முடிவை மாற்றினால் கட்சிக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று டான்ஸ்ரீ அனுவார் மூசா மற்றும் டான்ஸ்ரீ சஹிடான் காசிம் ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
அடுத்த பொதுத் தேர்தல் வரை பெரிக்தாகத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பது என்று அம்னோ போதுப்பேரவையில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த முடிவை மாற்றினால் அம்னோவுக்கு எதிராக சங்கங்களின் பதிவு இலாகா நீதிமன்ற நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர்கள் எச்சரித்தனர்.
பொது பேரவையில் எடுத்த முடிவை மாற்ற வேண்டுமென்றால் மீண்டும் பொதுப்பேரவை கூட்டப்பட வேண்டும் என அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு இவர்கள் இருவரும் முழு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
