
நாட்டில் புதிதாக 30 புதிய நோய்த்தொற்று திரள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
சிலாங்கூர், கோலாலம்பூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், ஜோகூர், பேரா, கிளாந்தான், சபா, சரவா, பகாங் ஆகிய மாநிலங்களில் இந்த புதிய நோய்த்தொற்று திரள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். இதில் இருபத்தொரு நோய்த்தொற்று திரள்கள் பணி இடங்கள் ஆகும்.



