
நாட்டில் நோய்த்தொற்று மோசம் அடையவில்லை என்றே கூறப்படுவது தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று கேள்வி எழுப்பினார்
மக்கள் மத்தியில் அதிக அளவில் கோவிட் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வாக இருப்பதாக கூறப்படுவது நம்பும் வகையில் இல்லை.
நாட்டில் நோய்த்தொற்றை மோசமடையவில்லை என்று புத்ரா ஜெயா கூறுகிறது. அப்படியானால் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் எண்ணிக்கை தங அதிகரித்து இருப்பது ஏன் என்று அவர் கேட்டார்.
மருத்துவமனைகளில் கட்டில்கள் பற்றாக்குறையால் கார் பார்க்கிங் இடங்களில் படுக்கையில் போடப்பட்டு வருகிறது.
நாட்டில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கொண்டிருப்பதே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.



