
கெடா சுங்கைபட்டாணி தாமான் பெருடா அருகில் உள்ள இந்து இடுகாட்டு நிலத்தை காலி செய்ய வேண்டுமெனக்கோரி, ஊடாவெஞ்சர்ஸ் மேம்பாட்டு நிறுவனம் நோட்டீஸ் வழங்கியிருப்பதைக் கண்டு, இப்பகுதி குடியிருப்பாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். கடந்த 2021 ஜனவரியில் சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் தமது கிளை நிறுவனத்தின் மூலமாகவழங்கியிருந்தது. இந்தகுடியிருப்புக்கு அருகில் எங்கள் மூதாதையர்கள் அடக்கம் செய்ப்பட்ட இடத்தைதங்களிடம் ஒப்படைக்குமாறு அந்தமேம்பாட்டு நிறுவனம் கேட்டுக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவித்த குடியிருப்பாளர்கள், இதற்கு பதிலாகமாற்று இடம் கேட்டு கெடா மாநில அரசிடம் முறையீடு செய்வோம் என்றனர்.



