
செய்தி : மெத்தியூஸ்
தமிழ்நாட்டு அரசாங்கத்திடம் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம் என்று மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சி தலைவர்களை பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேட்டுக்கொண்டார்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன் காக்க புதிய முதல்வராக பதவி ஏற்கும் மு.க ஸ்டாலின் வெளிநாட்டு தமிழர்கள் துறை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதுபற்றி கருத்துரைத்த டாக்டர் ராமசாமி தமிழ்நாட்டு அரசாங்கத்திடம் நாம் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.



