
சிலாங்கூர் மாநிலத்தில் ஆறு மாவட்டத்தில் நாளை முதல் மே 17ஆம் தேதி வரை MCO எனப்படும் மக்கள் நடமாட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்த கட்டுப்பாடுகள் எவ்வாறு நோய்த்தொற்றை கட்டுபடுத்தும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
கடைகள் செயல்படும் நேரத்தை குறைத்தால் அதன்மூலம் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தி விட முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினர்.
இதனிடையே சிலாங்கூர் மாநிலத்தில் நாளை முதல் அமுலுக்கு வரும் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு தெளிவில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ கேள்வி எழுப்பினர்.
எந்த அடிப்படையில் தேசிய பாதுகாப்பு மன்றம் குறிப்பிட்ட ஆறு மாவட்டத்தில் இந்த கட்டுப்பாட்டை விதிப்பதற்கு முடிவு செய்தது என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
