
அரசாங்கம் மற்றும் போலீஸ் துறைக்கு எதிராக பாலர் பள்ளி ஆசிரியை எம்.இந்திரா காந்தியை தொடுத்த வழக்கு டிசம்பர் 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.
தனது முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லாவை கைது செய்வதிலும் இளைய மகள் பிரசன்னாவை மீட்டு தருவதிலும் தோல்வி கொண்டிருப்பதால் போலீஸார் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக இந்திரா காந்தி 10 கோடி வெள்ளி இழப்பீடு கோரி வழக்கு தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு மனுவை தள்ளுபடி செய்யக்கோரி போலீஸ் மற்றும் அரசாங்க தரப்பில் செய்யப்பட்ட விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்திரா காந்தி தொடுத்துள்ள இந்த வழக்கு டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் தேதியை நிர்ணயித்தது.
