
பினாங்கு புக்கிட் குளுகோர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங் மற்றும் ஆயர் ஈத்தாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் இங்
சூன் சியாங் ஆகியோர் பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஆயர் ஈத்தாம் சட்டன்ற சேவை மையத்தின் ஏற்பாட்டில்,இங்குள்ள கம்போங் பீசாங் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டது.
கோவிட் – 19 தொற்று காலத்தில் அரசாங்கம் அமல்படுத்தியுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ்,வருமானமும்,வேலையுமின்றி தவிக்கும் மக்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்த உதவி வழங்கும் நிகழ்வில் இவ்வட்டார பெங்குலு நஸ்ரிசால்,கம்போங் பீசாங் எம்பிகேகே பொறுப்பாளர்கள் ஆகியோர் இதில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
