
கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் நேற்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 14 கருப்புக் கொடிகளை ஏந்தி இருந்தனர் மேலும் வெள்ளை துணிகள் போர்த்தப்பட்ட பொம்மை சடலங்களையும் அவர்கள் கொண்டு வந்தனர்.
நாட்டில் அதிகரித்துவரும் நோய் தொற்றினால் மக்கள் மடிந்த வண்ணம் இருக்கிறார்கள். மேலும் தற்கொலை சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டிருப்பதை உணர்த்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



