
வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது..
இதுவரை 2 லட்சத்து 53 ஆயிரத்து 366 ஆசியர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன அதேசமயம் 10,686 பள்ளி அதிகாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி போடப்பட்டுள்ள விகிதத்தை கருத்தில் கொண்டு செப்டம்பர் 1ஆம் தேதி மாணவர்களுடன் ஆசிரியர்கள் நேரடியாக கல்வி தொடங்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஒருவேளை தேதி மாற்றப்பட வேண்டும் என்று அவசியம் நேர்ந்தால் அது குறித்து ஆராயப்படும்.
கடந்த ஆண்டில் ஆறு மாதங்கள் குறைவாகவே பள்ளிகள் திறக்கப்பட்டன.
இவ்வாண்டு மார்ச் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது நோய்ஞ தாக்கத்தினால் மாணவர்கள் இணையம் வழி கல்வி கற்று வருகிறார்கள்.



