
முகக்கவசம் அணியாத ஆடவர் ஒருவர் கண்டபடி திட்டும் சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கோலாலம்பூர் டேசா பக்தியில் நாசிக் லெமாக் அங்காடி கடையில் முகக்கவசம் அணியாத அந்த ஆடவர் மற்றவர்களை நோக்கி கடுமையாக திட்டுகிறார்.
29 வினாடிகள் கொண்ட இந்த காணொளி இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலீஸார் விசாரணையை மேற்கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது..



