
நாட்டில் இதுவரை 1 கோடியே 3 லட்சத்து 1,905 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
நேற்று வரை சிலாங்கூரில் அதிகப்பட்சமாக பத்து லட்சத்து 7 ஆயிரத்து 444 பேர் தடுப்பூசி பெற்றனர்.
அதற்கு அடுத்த நிலையில் கோலாலம்பூர் 63,493 பேர், சரவா 46,606 பேர், ஜொகூர் 28,050 பேர், பினாங்கு 14,630 பேர் பெற்றனர் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே
நாட்டில் இதுவரை
47 லட்சத்து 69 ஆயிரத்து 909 பேர் முழுமையாக இரண்டு தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.
நாட்டின் மக்கள் தொகையில் 14.6 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
