
பெர்சத்து கட்சியின் 11லட்சத்து 20,000வெள்ளியை தவறாக பயன்படுத்தியதாக
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கடந்தாண்டு மார்ச் 6ஆம் தேதி இந்த அவர் இந்த குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனக்கு எதிரான 2 குற்றச்சாட்டுக்களை மறுத்து அவர் விசாரணை கோரினார்.
சைட் சாடிக் சார்பில் வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ மற்றும் ஹாஜிஹான் ஓமார் ஆஜராகினர்.
சைட் சாடிக் 3 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு முடிவடையும் வரை அவர் ஒவ்வொரு மாதமும் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் ஆஜராக வேண்டும். மேலும் தனது அனைத்துலகக் அழைப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
