
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் உதவியோடு அட்சயப் பாத்திரம் திட்டத்தின்கீழ் வசதி குறைந்த மக்களுக்கு இந்து ஆலயங்கள் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறது.
தற்போது அட்சயப் பாத்திரம் இரண்டு திட்டத்தின்கீழ் மாநிலத்திலுள்ள இந்து ஆலயங்கள் பெருமளவில் வசதி குறைந்த மக்களுக்கு உதவிகளை வழங்கி வருவது பாராட்டுக்குரியது.
அந்த வகையில் அம்பாங் புக்கிட் அந்தாரா பங்சாவில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரி காளியம்மன் ஆலயம் 100 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கியதாக சிலாங்கூர் கிராமத் தலைவர் ராஜேந்திரன் ராசப்பன் தெரிவித்தார்.
