
கோவிட் – 19 தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேருக்கு,பேரா கிரியான் பாரிட் புந்தார் தொகுதி மஇகா உடனடி உதவிக்கரம் நீட்டியது.
நேரில் சென்று குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய தொகுதித் தலைவர் வி.முத்தையா,செயலாளர் கா.சந்திரகாந்தன் அக்குடும்பத்திற்கு உணவுப் கூடையும் சிறிது பண உதவியும் வழங்கினர்.
இக்குடும்பத்தில் பெற்றோர்,எட்டு பிள்ளைகள் என பத்து பேருக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது கோலக்குராவ் தாமான் ஸ்ரீ குராவில் தங்களின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களில் ஒருவரிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றவுடன்,உடனடியாக இந்த உதவியை செய்ய முடிந்ததாக வி.முத்தையா தெரிவித்தார்.
