
நோய்த்தொற்று தாக்கம் அதிகமாக இருப்பதால்
கோம்பாக், தாமான் சமுட்ரா, டாமன்சாரா டாமாய் அடுக்கமாடி குடியிருப்பு, ஜாலான் பாண்டான் இண்டா, கிள்ளான் பண்டார் புக்கிட் திங்கி ஆகிய இடங்களில் ஜூலை 18 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை Emco விதிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள மக்களுக்கு அடுத்த வாரம் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
இங்குள்ள மக்களுக்கு விரைந்து கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டப் பின்னர் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடரும் என்று அவர் சொன்னார்.
