
காஜாங் போலீஸ் நிலையத்தில் இரண்டாவது மாடியில் கைதானவர்களுடன் மதுபானம் மற்றும் போதை நீரை அருந்தி கும்மாளம் அடித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் நான்கு போலீஸ்காரர்களும் வேலையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் டத்தோ சைட் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
இவர்கள் நான்கு பேரும் கண்டிப்பாக நீக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்..
கைது செய்யப்பட்ட நான்கு போலீஸ்காரர்கள் ஒருவர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக புக்கிட் அமான் உயர்நெறி கட்டொழுங்கு இயக்குனர் டத்தோ அஸ்ரி அமாட் இன்று தெரிவித்தூள்ளார்.
காஜாங் போலீஸ் நிலையத்தில் இரண்டாவது மாடியில் கைதானவர்களுடன் மதுபானம் மற்றும் போதை நீரை அருந்தி கும்மாளம் அடித்த சம்பவம் தொடர்பில் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ,3 போலீஸ்காரர்கள், 4 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
