
அதிகப் பணிசுமையை எதிர் நோக்கி உள்ள மருத்துவர்களில் சிலர் தங்கள் பணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர்.
கடந்த இரு வாரங்களில் 15 மருத்துவர்கள் பணி விலகி இருப்பதாக கூறப்படுகிறது.
பொது மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள் ஐந்து வருட பயிற்சிக்குப் பிறகு வேலை இழக்கும் வாய்ப்பை எதிர் நோக்கி வருகிறார்கள்.
அரசாங்க செலவினக் கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் ஆட்சேர்ப்பு அல்லது நிரந்தர பதவிகளில் பணி அமர்த்தப்படுவதில்லை.
எனவே, ஒப்பந்த மருத்துவர்கள் வரும் ஜூலை 26ஆம் தேதி, ஒருநாள் வேலை நிறுத்தம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதற்கு முன்னதாகவே அவர்களில் சிலர் பணியிலிருந்து விலகியுள்ளனர். அரசாங்கம் இவர்களின் பிரச்சினையைச் சமாளிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியது, ஆனால் இதுவரை பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
