
பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ அகமட் புஷி ஹாஜி அகமட் அப்துல் ரசாக் அவர்களின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு,பினாங்கு மாநில கத்தோலிக்க ஆயர் டிடி டத்தோ செபஸ்டியன் பிரான்சீஸ், டர்ஜா கெமிலாங் பங்குவான் நெகிரி எனும் உயரிய டத்தோஸ்ரீ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு பினாங்கு மாநில கத்தோலிக்க ஆயராக பொறுப்பேற்ற இவருக்கு 2016 ஆம் ஆண்டு பினாங்கு ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா ஹாஜி அப்துல் ரஹ்மான் அபாஸ் அவர்களின் பிறந்த நாளில் டார்ஜா செத்தியா பங்குவான் நெகிரி எனும் டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .
பேரா,பினாங்கு பெர்லிஸ் மற்றும் கிளாந்தான் ஆகிய நான்கு மாநிலங்களின் கத்தோலிக்க திருச்சபைகளுக்கு டத்தோஸ்ரீ செபஸ்தியன் பிரான்சீஸ் ஆயராக பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
