
இவ்வாண்டு இறுதியில் ஜொகூர் மாநிலத்தில் நடைபெறும் சுக்மா விளையாட்டு போட்டியில் சிலம்பம் இடம் பிடித்து உள்ளது.
இம்முறை மொத்தம் 36 போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் இடம்பெற்றிருப்பதாக அதன் தேசியத்தலைவர் எ விஸ்வலிங்கம் தெரிவித்தார். சிலம்பம் போட்டியில் மொத்தம் 14 மாநில மாநிலங்களைச் சேர்ந்த சிலம்ப விளையாட்டாளர்கள் பங்கேற்கிறார்கள். 15 பிரிவுகளில் நடைபெறும் சிலம்பப் போட்டி 15 தங்கம் 15 வெள்ளி 30 வெண்கலப்பதக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது
ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த போட்டியில் சிலம்பம் மீண்டும் இடம்பெற்றிருப்பது சாதனை என்று அவர் வர்ணித்தார்.
