
நாட்டில் தடுப்பூசி போடும் திட்டம் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார். கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது நேற்றுவரை 960,070 பேருக்கே முதல் தடுப்பூசி போடப்பட்டு விட்டது. இதில் 609,539 பேருக்கே இரண்டு முறை தடுப்பூசி போட பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
