25.3 C
Kuala Lumpur
Monday, April 20, 2026

Vetri

ஆளும் கட்சி வரிசையில் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

ஆறு மாதங்களுக்குப் பின்னர் பரபரப்பான சூழ்நிலையில் இன்று நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் காலை 10 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பக்கத்தில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அமர்ந்தார்.
இதுக்கு முன்னர் இந்த இருக்கையில் அஸ்மின் அலி அமர்ந்திருந்தார். இப்போது இவர் மூன்றாவது இருக்கையில் அமர்ந்தார்.
பிரதமருக்கு வழங்கி வந்த ஆதரவை அம்னோ மீட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்னோ எம்பிக்கள் ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர்.
பிரதமருக்கான ஆதரவை மீட்டுக் கொண்ட கிளந்தான் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்சா அம்சா மற்றும் மாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அமாட் ஜஸ்லான் ஆகியோரும் ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles