
வரும் திங்கட்கிழமை நடைபெறவிருந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நிஷாம் மைடின் அறிவித்துள்ளார்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நோய்த்தொற்று தாக்கம் ஏற்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தலைமை இயக்குனர் உறுதிபடுத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது..
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் வேறோரு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பிரதமர் அறிவித்திருப்பதாக அவர் சொன்னார்.
